கரூர்: கரூரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் உலாவரும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கரூர் மாநகர பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதையுடன் இளைஞர்கள் நாளுக்கு நாள் அடிதடி ரகளை மற்றும் பெண்களை கேலி செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே நுழையும் நுழைவாயில் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு முன் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையுடன் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் கஞ்சா போதையில் ரகளை செய்த நபரை பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அதிகமானதால் பரபரப்பு நீடித்தது.
பின்னர் புறக்காவல் நிலைய காவலர் விசாரணையில் ஈடுபட்டு அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். மதுபானக்கடை வாயிலிலும், கோயில் அருகேயும் கஞ்சா போதையுடன் சுற்றும் இளைஞர்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி வழியாக நடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.