தமிழகம்

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவர் விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் பரணி (19). இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும், இவர் திண்டிவனம் பகுதியில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.

அதேநேரம், பரணி விழுப்புரம் – மாம்பழப்பட்டு சாலை ஸ்டாலின் நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் சில நாட்களாக தங்கி, மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பரணி நேற்று (மார்ச் 28) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள தண்டவாளத்தின் அருகே அமர்ந்து கொண்டு ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சரியாக காலை 8 .15 மணிக்கு பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதை ரயில் ஓட்டுநர் கவனித்துள்ளார்.

இதனால் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளார். ஆனால், காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால், பரணி ரயில் வருவதை உணரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பரணி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வம், ரயில்வே பாதுகாப்பு துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வீரபாலன், விக்னேஷ் டேவிட் ஆகியோர் வந்து, உடலைக் கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

மேலும், இது தொடர்பாக விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொதுமக்கள் ரயில் பாதைகளில் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், செல்போன் பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

5 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

5 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

6 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

7 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

7 hours ago

This website uses cookies.