கடலூர் ; கடலூரில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மூக்கு சதை அறுவை சிகிச்சை செய்வதற்காக கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பதில் உள்ள பாஷியம் ரெட்டி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு முன்பாக அளிக்கப்படும் மயக்க மருந்தை, கோவிந்தராஜுக்கு மருத்துவர்கள் செலுத்தினர்.
அப்போது, திடீரென அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், அதிர்ந்து போன குடும்பத்தினர், கோவிந்தராஜை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கோவிந்தராஜின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும், தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, பண்ருட்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பெண்ணின் கைவிரல் அழுகியதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், கடலூரில் இளைஞர் ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மருத்துவமனையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.