சென்னை : சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் ரயிலில் இளைஞர்கள் வெளியே தொங்கி கொண்டு அபாயகரமான சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே, பேருந்துகள் மற்றும் ரயில்களில் இளைஞர்கள் சிலர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு அட்டகாசம் செய்யும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வந்தது.
அதே போல பள்ளி மாணவர்கள் பேருந்துகள், ரயில்களில் தொங்கியபடி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருவதும் தொடர்நது வருகிறது.
இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலில், இளைஞர்கள் சில ரயிலின் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். வெளியில் தொங்கியபடியும், ரயில் மீது ஏறியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.