தமிழகம்

கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!

விழுப்புரத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரைக் கொன்று கடலில் வீசிய சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

பின்னர், நவம்பர் 8ஆம் தேதி, புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயங்கள் உடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், இது குறித்து அவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த நபர் வசித்து வந்த அதே பகுதியில் இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து உள்ளார்.

இது தொடர்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த நபருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் மது விருந்து வைப்பதாகக் கூறி அந்நபரை அழைத்துச் சென்று உள்ளார்.

இதையும் படிங்க: 2 நாட்கள் ஆண் நண்பருடன் உல்லாசம்.. திடீரென லாட்ஜில் சரிந்த இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு!

பின்னர், அங்கு சென்ற பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி கொலை செய்துவிட்டு, கடலில் வீசிவிட்டுச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.