சிவகங்கை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வாசல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில், நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு உள்ளார். இதில், அவரின் முகம், கை, கால், தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு அலறித் துடித்துள்ளார்.
இதன்படி, சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், அந்த இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மேல் சிகிச்சைக்காக சிவகங்கைக்கும், அதனைத் தொடர்ந்து மதுரைக்கும் இளைஞர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், மதுரைக்குச் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இளைஞரின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர், திருப்பத்தூர் மின் நகர் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவரின் மகன் சண்முகவேல் என்ற சண்முகம் (27) என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மாயாஜால அறிக்கை.. பீகார் பட்ஜெட்.. இபிஎஸ் கடும் விமர்சனம்!
மேலும், அவரை நான்கு பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.