நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி – குன்னூரில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பெட்போர்டு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்பவர் மாணவியை நோக்கி சென்றார்.
அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக, மாணவியை ஆசிக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதனால், காயமடைந்த மாணவி வலி தாங்க முடியாமல் துடித்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவியை கத்தியால் குத்திய ஆசிக்கை, அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 26 வயதான ஆசிக் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.