திருமயம் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக முகாம் நிர்வாகத் தலைவர் முகாமில் வசிக்கும் ஒருவரை கத்தியால் வெட்டி இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் லெனா விலக்கு இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு முகாம் நிர்வாக தலைவராக மருதமுத்து மகன் மயில்வாகனன் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜூட் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இது இருவருக்கும் இடையே முன் விரோதமாக மாறியது. இந்நிலையில் மயில்வாகனன் நேற்று மாலை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முகாம் பகுதியில் ஜூட் பிரேம்குமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனிடையே, மது போதையில் வந்த மயில்வாகனன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த ஜூட் பிரேம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மயில்வாகனன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜூட் பிரேம்குமாரை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பிரேம்குமாருக்கு முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த அவரது தங்கை சஜிதா பிரேமகுமாரி மற்றும் அவரது உறவினர் மணிமேகலை ஆகிய இரு பெண்களையும் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயம் ஏற்பட்ட பிரேம்குமார் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட இரு பெண்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக லேனா விளக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நிர்வாக தலைவர் ஒருவரே கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமணசமுத்திரம் போலீசார் மயில்வாகனனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.