தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னன். இவரது சகோதரி உமா நேற்று அவரது ஊருக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவன் உமாவை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று தாக்கி பாலியல் தொந்தரவு செய்ய முயற்சி செய்துள்ளான்.
அப்போது அந்தப் பெண் உடனே கூச்சலிடவே கிராமத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராஜேஷை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். காயமடைந்த உமாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ராஜேஷ் சென்றுள்ளான். இதனை பார்த்த உமாவின் தம்பி சென்னன், ஆத்திரமடைந்து அங்கிருந்த இரும்பு ராடால் ராஜேஷ் மண்டையை தாக்கினார். அப்போது, ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷை மருத்துவ ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, தருமபுரி நகர காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை செய்து, சென்னனை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இருவரை தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் மத்தியில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, தம்பி இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.