திருவள்ளூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித் (25) என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி முட்புதர் அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.
அவரது தந்தை பச்சையப்பன் என்பவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாகராஜ் கார்த்திக் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவர் அளித்த தகவலின் பேரில் கிணற்றில் இருந்து அஜித் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையில் தொடர்புடைய மோகன், சாய், கணேஷ் சந்தேகத்துக்கிடமான வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மூன்று நாட்களாக கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிணற்றிலிருந்து இளைஞரின் உடல் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.