Categories: தமிழகம்

3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் உல்லாசம் : இளைஞரை கண்டித்த கணவர்.. நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

கடலூர் : விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோமங்கலம் கிராமத்தில் மர்மமான முறையில் பெரியசாமி என்பவர் மகன் பழனிவேல் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் காவல் துறைக்கு தகவல் கூறியதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பழனிவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைக்கு தாயான பெரியசாமி மனைவி வெண்ணிலாவுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் இதனால் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் நேற்று இரவு இதுகுறித்து தகராறில் அந்த பெண்ணின் கணவர், மைத்துனர் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து பழனிவேலை இரும்பு கம்பியால் அடித்து உதைத்ததாகவும் இரு தரப்பினரையும் பொதுமக்கள் விலக்கிவிட்டு சென்றதாகவும் அந்த பெண்ணின் கணவன் மற்றும்உறவினர்கள் பழனிவேலிடம் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பழனிவேல் இறந்து இருந்தது அவர்களின் உறவினர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையில் புகார் மனு அளித்து கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலை கைப்பற்றி விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என்பதால் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

12 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

12 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

13 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

14 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

14 hours ago

This website uses cookies.