தமிழகம்

புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில், ஒரு பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், இதைப் பார்த்த போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜன் (30) என தெரிய வந்துள்ளது. மேலும், ராஜனை அவரது நண்பர்கள் இருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக ராஜன் காவல் நிலையம் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!

ஆனால், அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென போலீஸ் ஸ்டேஷன் வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு ராஜன் தீ வைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(குறிப்பு: எந்தவொரு நிலையிலும், நிலைக்கும் தற்கொலை தீர்வல்ல)

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

4 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

4 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

5 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

5 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

5 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

6 hours ago

This website uses cookies.