தமிழகம்

புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில், ஒரு பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், இதைப் பார்த்த போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜன் (30) என தெரிய வந்துள்ளது. மேலும், ராஜனை அவரது நண்பர்கள் இருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக ராஜன் காவல் நிலையம் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!

ஆனால், அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென போலீஸ் ஸ்டேஷன் வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு ராஜன் தீ வைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(குறிப்பு: எந்தவொரு நிலையிலும், நிலைக்கும் தற்கொலை தீர்வல்ல)

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.