தமிழகம்

காதலியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி.

இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 30). கோவை சீர நாயக்கன் பாளையத்தில் ராதாகிருஷ்ணன் தெருவில் தங்கி இருந்து எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.

கடைசியாக கோவை நேதாஜி ரோட்டில் உள்ள தியேட்டரில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரக்ஷ்னி என்ற பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பிரேம்குமார் ரக்ஷ்னிக்கு தெரியாமல்
கவிதா என்ற பெண்ணையும் காதலித்து வந்து உள்ளார்.

கவிதா ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கவிதாவிடம் பிரேம்குமார் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை மறைத்து உள்ளார்.

தில்லாலங்கடி படத்தில் வரும் சம்பவம் போல ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதாவை அடிக்கடி பிரேம்குமார் சந்தித்து வந்து உள்ளார்.

இது நீண்ட நாட்களாக ரக்ஷ்னிக்கு தெரியாமல் இருந்தது. அடிக்கடி காதலி ரக்ஷ்னியை மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டு பிரேம்குமார் கவிதாவுடன் கோவையில் உள்ள வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் காதலிகள் இருவருக்கும் பிரேம்குமார் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் போதே செல்போனில் தனியாக சென்று பேசுவது என்று இருந்ததால் இது குறித்து தனித் தனியே இருவரும் கேள்வி கேட்டு உள்ளனர்.

ஆனால் பிரேம்குமார் இருவரையும் சமாளித்து வந்து உள்ளார். ஆனால் பிரேம்குமாரின் இந்த காதல் இரு காதலிகளுக்கும் தெரியவந்தது.

இதனால் பிரேம்குமாரை இருவரும் கேள்வி கேட்டனர். தனது குட்டு அம்பலமானதால் பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று ரக்ஷ்னிக்கு செல்போனில் பேசிய பிரேம்குமார் “நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ் என்று”கூறிவிட்டு பிரேம்குமார் போனை துண்டித்து விட்டால்.
இதனால் மீண்டும் பிரேம்குமாரை ரக்ஷ்னி தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சடைந்த ரக்ஷ்னி மற்றும் கவிதா ஆகியோர் பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

அதன் பிறகு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரேம்குமார் மின்விசிறியில் லுங்கியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சடைந்தனர்.

மேலும் படிக்க: பெண்ணை கொலை செய்து சடலத்தை வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம்.. ஆண் நண்பர் கைது : திடுக்கிடும் தகவல்!

பிறகு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மதுரையில் உள்ள பிரேம்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று பிரேம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கோவையில் தில்லாலங்கடி படத்தில் வருவது போல் வாலிபர் 2 பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி காதலித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

10 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

11 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

12 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

12 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

13 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

13 hours ago

This website uses cookies.