காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில், வாட்ஸ் ஸ்டேட்டஸில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவை போட்டுவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா – அமிதா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் சரத்குமார் (26) பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 26 வயதான சரத்குமாருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோரிடம் கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட சரத்குமார், நேற்று வீட்டில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் வெளியே சென்றவர், இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை
தன்னுடைய புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் வைத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் தனது இறப்பு நேரிட போவதாக ஸ்டேட்டஸ் பதிவு செய்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை காட்பாடி அடுத்த ஜாப்ராப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக விருதம்பட்டு போலீசார் மற்றும் காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருதம்பட்டு போலீசார் மற்றும் உறவினர்கள் காட்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சரத்குமாரின் உடலை மீட்டனர்
விருதம்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகாத விரக்தியில் தான் ஒரு மணி நேரத்தில் இறந்து போவதாக ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.