காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில், வாட்ஸ் ஸ்டேட்டஸில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவை போட்டுவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா – அமிதா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் சரத்குமார் (26) பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 26 வயதான சரத்குமாருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோரிடம் கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட சரத்குமார், நேற்று வீட்டில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் வெளியே சென்றவர், இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை
தன்னுடைய புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் வைத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் தனது இறப்பு நேரிட போவதாக ஸ்டேட்டஸ் பதிவு செய்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை காட்பாடி அடுத்த ஜாப்ராப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக விருதம்பட்டு போலீசார் மற்றும் காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருதம்பட்டு போலீசார் மற்றும் உறவினர்கள் காட்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சரத்குமாரின் உடலை மீட்டனர்
விருதம்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகாத விரக்தியில் தான் ஒரு மணி நேரத்தில் இறந்து போவதாக ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.