விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞர்கள் கருங்கற்களை கொண்டு அரசு பள்ளி கதவு மற்றும் சுவர்களை உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளி முடிந்தவுடன் அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் இந்தப் பள்ளியில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர் என்று ஏற்கனவே கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்தப் பள்ளியின் கட்டிடத்தை கற்களால் கொண்டு அடித்து உடைக்கப்பட்டு பின்னர் கருங்கல்களைக் கொண்டு வகுப்பறை இரும்பு கதவை உடைக்கும் காட்சி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இவர்கள் அந்தப் பகுதியில் தினந்தோறும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதோடு தற்போது பள்ளி கட்டிடத்தையும் உடைக்கத் துவங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.