திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலரும் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, காளிதாஸ் இருவரும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே ஆயக்குடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
பிடிபட்ட நபர்களிடமிருந்து சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.