கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன்
இவர்கள் இன்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளனர்
அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில் நின்று மது குடித்து கொண்டு இருந்துள்ளனர் அதனை பார்த்த போலீசார் இங்கு நின்று மது குடிக்க கூடாது இங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்
இதனால் போலீசாருக்கும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கி உள்ளனர்
இதனையடுத்து காவலர்கள் அது குறித்து அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் அங்கு விரைந்து சென்ற சக போலீசார் காவலர்களை தாக்கி மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் அவர்கள் கிருத்திக், ஈஸ்வரன்,பிரதீஷ் என்பதும் இவர்கள் மூவரும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் மது போதையில் போலீசாரிடமே தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது
இதனையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.