திருப்பூர் ; பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நவாஸ் செரீப். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். எப்போதும் பணி முடிந்து வந்ததும் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவது வழக்கம். நேற்றிரவும் வழக்கம் போல, பணி முடிந்து வீடு திரும்பிய நவாஸ் செரீப், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
காலை எழுந்து வந்து பார்த்த போது அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 12 மணி அளவில் அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்கள், நவாஸ் செரீப்பின் இரு சக்கர வாகனத்தின் சைட் லாக்கை உடைத்து வண்டியை தள்ளி சென்றது பதிவாகியிருந்தது.
இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.