கோவையில் நடுரோட்டில் ஒரே வண்ண ஆடைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர், ஆபத்தான முறையில் தீபாவளி கொண்டாடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர்: நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம், புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என களைகட்டியது. அந்த வகையில், கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில், தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து தங்களது இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள், பேருந்து நிலையத்தின் முன்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி, தீபாவளியை ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது, தங்களது இருசக்கர வாகன ஹாரன்களை இடைவிடாது ஒலிக்க வைத்து கூச்சலிட்டனர். அது மட்டுமல்லாமல், கைகளில் வண்ண வண்ண புகையை வெளியேற்றும் பட்டாசுகளை ஏந்தி ஒரு சிலரும், மேலும் ஒரு சிலர் சரவெடிகளை கைகளில் பிடித்துக் கொண்டு வெடிக்க வைத்தனர்.
இதனால் உடலில் பட்டாசு தீ விழுந்தவுடன், அதை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் முன்பாக வீசி எறிந்தனர். இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், தாங்கள் செல்வதற்கு வழி கிடைக்காமல் தவித்தனர். பின்னர், அவர்களும் சேர்ந்து ஹாரன்களை ஒலித்தபடியே இருந்ததால், அந்தப் பகுதியே திடீரென பரபரப்பாக காணப்பட்டது.
இதில் ஒரு தம்பதியும் குழந்தையோடு இருந்தனர். மேலும், கைகளில் பட்டாசு வெடித்து, அதை வீசி எரிவதை பார்த்ததும், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர், சுமார் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தத்தின் முன்பாக தீபாவளியை ஆபத்துடனும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாடிய இளைஞர்கள், தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்ற இளைஞர் பலி.. ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் சோகம்!
இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.