Meta logo
Meta (முன்பு பேஸ்புக்) வியாழன் அன்று பயனர்களுக்கான புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் பேஸ்புக்கில் உங்கள் போஸ்டுகளை யார் பார்க்கிறார்கள் என்பதை எளிதாக நிர்வகிப்பதற்கான புதிய அமைப்பை வெளியிடுவதாகக் கூறியது.
இப்போது, யாரேனும் டிஃபால்ட்டாக ஆடியன்ஸைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த ஆடியன்ஸ்களின் தேர்வு பேஸ்புக்கில் உருவாக்கப்பட்ட புதிய போஸ்டுகளுக்குப் பொருந்தும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட போஸ்டிற்கு வேறு ஆடியன்ஸ்களைத் தேர்ந்தெடுக்காத வரையில் அவர்கள் தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.
முன்னதாக, நீங்கள் சமீபத்தில் தேர்ந்தெடுத்த ஆடியன்ஸூகளே, போஸ்டுகளுக்கான உங்கள் டிஃபால்ட் ஆடியன்ஸூகளாக இருந்தனர். எனவே மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு போஸ்டை நீங்கள் போட்டிருந்தால், உங்கள் அடுத்தடுத்த போஸ்டுகளும் அதில் இருக்கும்.
“கம்யூனிட்டியில் உள்ள சரியான நபர்களுக்கு உங்கள் போஸ்டை பகிர்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்தப் புதிய அமைப்பு உங்களுக்கு உதவும்” என்று Metaவின் முதன்மை தனியுரிமை அதிகாரி மைக்கேல் புரோட்டி கூறினார்.
Meta சமீபத்தில் விளம்பர தலைப்புகள் (Ad topics) மற்றும் ஆர்வ வகைகளின் (Interest categories) கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் அணுகக்கூடிய ஒரே கட்டுப்பாட்டை உருவாக்கியது.
நிறுவனம் உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்வதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் தனியுரிமைக் கொள்கையை மீண்டும் எழுதி, மறுவடிவமைத்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
Meta புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பற்றிய அறிவிப்புகளை பயனர்களுக்கு அனுப்பும். இந்த புதுப்பிப்புகள் ஜூலை 26 முதல் நடைமுறைக்கு வரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
This website uses cookies.