புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூகிள் பிளே ஸ்டோர் பாலிசியானது மே 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. புதிய பாலிசியின்படி, Google இன் அணுகல்தன்மை APIகளைப் பயன்படுத்தி கால் ரெக்கார்டிங் இனி அனுமதிக்கப்படாது. அணுகல்தன்மை இல்லாததால் ஆண்ட்ராய்டின் அணுகல்தன்மை APIகளைப் பயன்படுத்தும் ஆப்களை ஒடுக்குவதற்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இயங்கும் மூன்றாம் தரப்பு ஆப்
களுக்கு, அணுகல்தன்மை APIகள் (Accessibility APIs) கால் ரெக்கார்டிங் செய்வதற்கான ஒரே வழி.
கூகுள் தனது சாதனங்கள் மற்றும் சாஃப்ட்வேர் களைப் பயன்படுத்தி பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு உதவுவதற்காக அணுகல்தன்மை API களை வடிவமைத்துள்ளது. ஆனால் இது கால் ரெக்கார்டிங் நோக்கங்களுக்காக அல்ல.
இருப்பினும், கூகுளின் ஆப் ஸ்டோரில் கால் ரெக்கார்டிங் செய்யும் ஆப்கள் தடைசெய்யப்பட்டாலும், பயனர்கள் தொடர்ந்து அவற்றை அணுகுவார்கள். ஏனென்றால், ஆண்ட்ராய்டு இயங்குதளமானது, ஆப்பிளின் ஐஓஎஸ் போலல்லாமல், மற்ற ஸ்டோர்களில் இருந்து ஆப்களை அணுக அதன் பயனர்களை அனுமதிக்கும் திறந்த ஒன்றாகும். சைட்லோடிங் என அழைக்கப்படும் இந்த நடைமுறையானது, நுகர்வோருக்கு பாதுகாப்பற்றது. ஏனெனில் இது சாத்தியமான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்களுக்கு அவர்களைத் தள்ளுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், இன்பில்ட் கால் ரெக்கார்டிங் ஆப்களை வழங்கும் Samsung மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்கள் தங்களது சேவைகளை தொடர முடியும். இந்த பாலிசியானது நேட்டிவ் கால் ரெக்கார்டிங் ஆப்பை பாதிக்காது என்று கூறியது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.