வாட்ஸ்அப் எப்போதுமே அனைவருக்கும் இலவச செய்தியிடல் சேவையாக இருந்து வருகிறது. ஆனால் மெட்டாவுக்குச் சொந்தமான இந்த உடனடி செய்தியிடல் செயலி அதன் முதல் கட்டணச் சேவையைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது. WABetaInfo இன் புதிய அறிக்கை, வாட்ஸ்அப் வணிக பயனர்கள் (Whatsapp Business Account) எதிர்காலத்தில் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் சந்தா திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது. எவ்வாறாயினும், சந்தா திட்டம் ஒரு விருப்பமான கூடுதலாக தான் இருக்கும். மற்றும் திட்டத்தால் வழங்கப்படும் சலுகைகள் தேவைப்படாதவர்கள் தற்போதைய அம்சத்துடன் வாட்ஸ்அப் பிஸினஸ் அகௌண்டை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் பிஸினஸ் சந்தா திட்டம்: புதியது என்ன?
அறிக்கையின்படி, வாட்ஸ்அப் கட்டணமுள்ள சந்தா சேவையில் பல அம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று ‘இணைக்கப்பட்ட சாதனங்கள்’ அம்சத்துடன் அதிக சாதனங்களைச் சேர்க்கும் திறன் ஆகும். இது பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் வெப் கணக்கை பலவற்றில் அணுக அனுமதிக்கிறது. பிரதான ஃபோனில் நெட்வொர்க் இணைப்பு இல்லாத போதும் ‘இணைக்கப்பட்ட சாதனங்கள்’ அம்சம் வேலை செய்யும். பிஸினஸ் கணக்குகளுக்கான இணைக்கப்பட்ட சாதனங்களுக்கான வரம்பை விரிவுபடுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ்அப் தற்போது நான்கு சாதனங்களை இணைக்க பயனர்களை அனுமதிக்கும் அதே வேளையில், சந்தா சேவையானது அந்த வரம்பை 10 சாதனங்கள் வரை அதிகரிக்கிறது. இது பிஸினஸ் கணக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும். அங்கு குரூப் மெம்பர்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு பல சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
சந்தா திட்டம் தற்போது வெளியிடப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் iOSக்கான வாட்ஸ்அப் பிசினஸ் பீட்டாவில் கிடைக்கும். கூடுதல் இணைக்கப்பட்ட சாதனங்களைத் தவிர பிஸினஸ் கணக்குகளுக்குத் தொடர்புடைய கூடுதல் அம்சங்கள் பின்னர் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.