கோவை வால்பாறை எஸ்டேட் அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது வடமாநில சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பிகேடிக்குச் சொந்தமான ஊசிமலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள எஸ்டேட் பகுதி ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஐயூன் அன்சாரி (41) – நசீரான் தம்பதி. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்களுக்கு நான்கு வயதில் அப்துல் கதும் என்ற பெண் குழந்தை உள்ளார்.
இந்த நிலையில், இவர் இன்று (அக்.19) தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை வாயில் கவ்வியுள்ளது. பின்னர், அக்குழந்தை கதறிய நிலையிலும், அருகிலுள்ள 14ஆம் எண் காட்டிற்குள், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது.
அப்போது, அவருடைய தாயார் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுத்தையை துரத்தி உள்ளனர். இதனால், அந்த சிறுத்தை அங்கு உள்ள காட்டிற்குள் சிறுமியை போட்டுவிட்டுச் சென்றுள்ளது. பின்னர் இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.30,000 செலுத்தினால் ஆபாசப் படம் பார்த்ததில் இருந்து விடுபடலாம்.. சைபர் கிரைம் முக்கிய எச்சரிக்கை!
மேலும், இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.