டாப் நியூஸ்

கஸ்தூரி தலைமறைவா? தீவிரமாகத் தேடும் போலீசார்!

தெலுங்கு பெண்களை இழிவாக பேசியதாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை தொடர்ந்து எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தெலுங்கு பேசக்கூடிய பெண்களை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக சென்னை மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் பெண்கள் மற்றும் தெலுங்கு சமூக அமைப்புகள் புகார்கள் அளித்து வந்தனர். இந்த புகார்களின் எண்ணிக்கை மறுநாள் அதிகரிக்கத் தொடங்கி, மாநில செய்தி மேடையில் அரசியல் கவனமும் பெற்றது.

அந்த வகையில், தெலுங்கு பேசுபவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க திட்டமிட்டனர். இதன்படி, இன்று கஸ்தூரிக்கு சம்மன் வழங்க போலீசார் சென்றபோது, போலீசார் வருவதற்கு முன்னதாகவே, அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்று உள்ளனர். மேலும், கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?

முன்னதாக, பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை” எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

நான் வீழ்வேனா..வீல் சேரில் சென்றாவது விளையாடுவேன்..மனம் திறந்த எம்.எஸ்.தோனி.!

தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி 2019-ஆம் ஆண்டு சர்வதேச…

33 minutes ago

வா முடிஞ்சா மோதி பாரு..CSK-வை வாழ்த்திய கமலின் ‘தக் லைஃப்’ படக்குழு.!

சிஎஸ்கே-க்கு ஆதரவு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படக்குழு சென்னை சூப்பர்…

1 hour ago

படப்பிடிப்பில் ‘நயன்தாரா’ அட்டூழியம்..கடுப்பான சுந்தர்.சி..மூக்குத்தி அம்மன் 2-ல் சிக்கல்.!

'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…

2 hours ago

முடிவுக்கு வந்த ‘சுஷாந்த்’ வழக்கு…முக்கிய அறிக்கையை தாக்கல் செய்த CBI.!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…

4 hours ago

சேப்பாக்கத்தை அலறவிடும் அனிருத்…அனல் பறக்குமா இன்றைய ஆட்டம்.!

அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…

5 hours ago

தனுஷ் இயக்கத்தில் அஜித்தா…தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…

6 hours ago

This website uses cookies.