100 நாள் வேலை திட்டத்திற்கும் நிதிப் பற்றாக்குறை – மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி!

Author: Hariharasudhan
17 அக்டோபர் 2024, 7:57 மணி
Durai Vaiko
Quick Share

மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில்லை என துரை வைகோ எம்பி குற்றம் சாட்டினார்.

திருச்சி: திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.17) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி எம்பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருச்சி எம்பி துரை வைகோ, “மத்திய அரசால் மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது. துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு, துறைகளில் உள்ள குறைகள் கேட்டறியப்பட்டு அவற்றை சரி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் களப்பணியாற்றிட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும், காவல்துறையினர் இன்றைய கூட்டத்தில் விளக்கினர். விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும் ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பு குறைபாட்டாலும் ஏற்படுகிறது. அவற்றை சரி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம். அந்தத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதை குறைத்து வருகின்றனர். குறைவான அளவில் நிதி ஒதுக்கினாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மக்களுக்குத் தேவையான ஊதியம் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, அதற்கான தொகையை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்குகின்றனர்.

இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் அந்தத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் நூறு நாட்கள் முழுமையாக வேலை வழங்கி, நிதியைக் குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்காமல் உள்ளது.நிதி குறைப்பு இருந்த பொழுதும், அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, இன்னும் பிற திட்டங்களுக்கு முழுமையாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. முக்கியமாக, மோடி வீடு கட்டும் திட்டத்தில் கூட முழுமையாக நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. மாநில அரசு தான் பாதி தொகைக்கு மேல் நிதியை வழங்குகிறார்கள்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியை பொறுத்தவரை மிகப் பெரிய தவறை செய்து வருகின்றனர். அதனுடைய பாதிப்பை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். பாதிப்படையும் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஏர் இந்தியா விமான நிறுவனம் பராமரிப்பு குறைவாக உள்ளது. அவர்களின் சேவைகளில் பல குறைகள் இருக்கிறது. அனைத்து விமான நிறுவனங்களும் தங்களுடைய விமானங்களை முறையாக பராமரிக்கிறார்களா என்பது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை முறையாக கண்காணிக்கிறார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவோம்.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மிகப்பெரிய குறையாக முன் வைத்தது மத்திய அரசு ஒதுக்கக்கூடிய குறைவான நிதிதான். மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு போதிய நிதியை அவர்கள் ஒதுக்கவில்லை. தமிழக அரசு தான் கூடுதல் நிதியை ஒதுக்கி, அந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, தமிழக அரசுக்கு நிதி தட்டுப்பாடு இருக்கையில், மத்திய அரசும் நிதி ஒதுக்காததால் அதை மிகப்பெரிய சங்கடத்தை தமிழகத்திற்கு தருகிறது” என்றார்.

இதையும் படிங்க : கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

இதனையடுத்து, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளை டெல்லியில் சந்தித்துள்ளேன். அவர்கள் நேர்மறையான பதிலை தான் அளித்துள்ளனர். தொடர்ந்து அதை வலியுறுத்தி வருகிறோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அவர்கள் உறுதியளித்து உள்ளார்கள்.

பெரம்பலூரில் ரயில் பாதை ரயில் நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. வணிக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ரயில் பாதை அமைக்கும் பொழுது பெரம்பலூரில் அமைக்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.

  • Gold தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் உச்சம்!
  • Views: - 102

    0

    0

    மறுமொழி இடவும்