டாப் நியூஸ்

ரூ.30,000 செலுத்தினால் ஆபாசப் படம் பார்த்ததில் இருந்து விடுபடலாம்.. சைபர் கிரைம் முக்கிய எச்சரிக்கை!

ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதால் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற வரிகளுடன் வரும் மெசேஜை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டின் இணையவழி குற்றதடுப்புப்பிரிவு (TN Cyber Crime) தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவெளிரோந்துக் குழுவானது, தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் (cybercrime.gov.in) போன்ற போலியான இணையதளத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்த இணையதளத்தில் “உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது” என்று அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பிக்கப்பட்டு, மேலும் அதில் “கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV” போன்ற முக்கியமான தகவலைப் பதிவு செய்து பணம் பறிக்க வழிவகை செய்ய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இதில் ‘நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தியோடு IPC பிரிவுகளையும் உள்ளிட்டு, 30,290 ருபாய் அபராதம் என காண்பித்து பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடிக்காரர்கள் முற்பட்டு உள்ளனர்.

இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு, கிரெடிட்கார்டு விவரங்களையும் உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு விவரங்கள் இதன் மூலம் திருடப்பட்டு, பின்னர் மோசடி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பிஞ்சுக் குழந்தைனு கூட பார்க்கலையே.. +2 மாணவி உட்பட 2 பேர் கொலை.. தலைமறைவான சித்தப்பா!

மேலும் சைபர் கிரைம் அறிக்கையின் அடிப்படையில், விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு, சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்நிகழ்வு URLகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இல்லையெனில், குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல், இந்திய தபால் துறையில் இருந்து பார்சல் வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி தற்போது நிலவி வருகிறது. “உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க” என்று SMS வருகிறது.

இதனை கிளிக் செய்யும் பொழுது பார்சலை திரும்ப எடுத்து வருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) 25 INR கோருகிறது. இதுவும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்போது சைபர் கிரைம் மோசடி அரசு இணையதளம் போன்று அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

11 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

12 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

14 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.