டாப் நியூஸ்

ரூ.30,000 செலுத்தினால் ஆபாசப் படம் பார்த்ததில் இருந்து விடுபடலாம்.. சைபர் கிரைம் முக்கிய எச்சரிக்கை!

ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதால் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற வரிகளுடன் வரும் மெசேஜை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டின் இணையவழி குற்றதடுப்புப்பிரிவு (TN Cyber Crime) தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவெளிரோந்துக் குழுவானது, தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் (cybercrime.gov.in) போன்ற போலியான இணையதளத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்த இணையதளத்தில் “உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது” என்று அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பிக்கப்பட்டு, மேலும் அதில் “கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV” போன்ற முக்கியமான தகவலைப் பதிவு செய்து பணம் பறிக்க வழிவகை செய்ய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இதில் ‘நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தியோடு IPC பிரிவுகளையும் உள்ளிட்டு, 30,290 ருபாய் அபராதம் என காண்பித்து பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடிக்காரர்கள் முற்பட்டு உள்ளனர்.

இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு, கிரெடிட்கார்டு விவரங்களையும் உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு விவரங்கள் இதன் மூலம் திருடப்பட்டு, பின்னர் மோசடி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பிஞ்சுக் குழந்தைனு கூட பார்க்கலையே.. +2 மாணவி உட்பட 2 பேர் கொலை.. தலைமறைவான சித்தப்பா!

மேலும் சைபர் கிரைம் அறிக்கையின் அடிப்படையில், விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு, சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்நிகழ்வு URLகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இல்லையெனில், குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல், இந்திய தபால் துறையில் இருந்து பார்சல் வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி தற்போது நிலவி வருகிறது. “உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க” என்று SMS வருகிறது.

இதனை கிளிக் செய்யும் பொழுது பார்சலை திரும்ப எடுத்து வருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) 25 INR கோருகிறது. இதுவும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்போது சைபர் கிரைம் மோசடி அரசு இணையதளம் போன்று அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

25 minutes ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

26 minutes ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

57 minutes ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

2 hours ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

17 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

This website uses cookies.