டாப் நியூஸ்

தோனி வந்தாச்சு.. அடுத்த மாஸ் கம்பேக் வீரர்கள் யார் யார்?

சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி விளையாடுவது உறுதியான நிலையில், சில முக்கிய வீரர்கள் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி: மிகப்பெரும் கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டிருப்பது ஐபிஎல் போட்டிகள். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் 2025, மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் 18வது ஐபிஎல் சீசனில் அணிகள் தக்க வைத்துள்ள பட்டியல் நேற்று ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட்டது.

இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கும், மதீஷா பதிரானாவை 13 கோடி ரூபாய்க்கும், சிவம் துபே 11 கோடி ரூபாய், ரவீந்திர ஜடேஜா 18 கோடி ரூபாய் மற்றும் மகேந்திர சிங் தோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம் எஸ் தோனி தக்க வைக்கப்பட்டு உள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 43 வயதான தோனி மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் எப்போதும் தனி இடத்தை அளித்து உள்ளனர். அதன் பிரதிபலிப்பே இது என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அனிருத் இடம்பெற்ற வீடியோ ஒன்றையும் சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்து இருந்தது.

அதனையும், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்படவில்லை. எனவே, அவர்கள் மூவரும் மெகா ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க: வரலாற்றை உருவாக்கிய நியூசிலாந்து.. மாற்றிய இந்தியா.. டெஸ்ட் தொடர் சாதனை!

இதனிடையே, ரவிச்சந்திரன் அஸ்வின், டூ பிளசிஸ், சாம் கரண் மற்றும் நடராஜன் ஆகியோர் சென்னை சூப்பர் கின்ஸ் அணியால் மெகா ஏலத்தில் எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவர் மீதும் ஒருவித கிரேஸ் உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி உள்ளது.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

2 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

3 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

3 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

4 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

5 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

5 hours ago

This website uses cookies.