திருவண்ணாமலை செய்யாறில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பல வருடமாக கல்லூரியின் சுற்றுச்சுவர்களும் கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
மேலும் கல்லூரி வளாகத்திலேயே பல இடங்கள் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியின் கழிவறையில் பாம்பு குட்டிகள் நெளியும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
பெண்கள் கழிவறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளதோடு கழிவறையை தூய்மைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்புகள் நெழியும் வீடியோ குறித்து ஜிவி பிரகாஷ்குமார் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பதிவில், தங்கள் கடமையை செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும் என சாபம் விடும் தொனியில் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.