டாப் நியூஸ்

கட்சியை உடைக்கும் முக்கிய அரசியல் தலைவர்.. எல்லையில் மாறும் அரசியல்!

மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் கட்டமைப்பை முழுவதும் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்: முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. முன்னதாக, 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரானது போலவே, முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 28 இடங்களில் வென்று, பாஜக உடன் கூட்டணி அமைத்து, அவரும் முதல் முறையாக எப்போதும் சர்ச்சையான அரசியலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக முப்தி முகம்மது சையது மாறினார்.

பின்னர், 2015ஆம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையது உடல் நலக்குறைவால் காலமாக, அம்மாநிலம் ஆளுநர் ஆட்சிக்கு கீழ் வந்தது. இதனையடுத்து, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையுடன் மெகபூபா முப்தி முதல்வரானார். ஆனால், இதில் பாஜக உடன் கூட்டணியில் இருந்தது பிடிபி. ஆனால், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு அளிக்காததால், பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றது.

இதனால், மீண்டும் ஜம்மு காஷ்மீர் ஆட்சி ஆளுநருக்கு கீழாக வந்தது. பின்னர், அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டு, தேசிய அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18, 26 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கூட்டணி, பாஜக என இருமுனைப் போட்டி நிலவியது. இந்த ரேஸில் மெகபூபா முப்தி மகளும் களமிறக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42, பாஜக 29, காங்கிரஸ் 6, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடம் மற்றும் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

இதையும் படிங்க: தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!

அப்போது வெற்றி பெற்ற கூட்டணிக்கு மெகபூபா முப்தி வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் தகர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் புதிய பொறுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றை உருவாக்கி கட்சியை பலப்படுத்த உள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

5 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.