டாப் நியூஸ்

ரூ.25,000 நிவாரணம் எதற்கு? கம்யூ எம்பிக்கு திமுக அமைச்சர் கேள்வி!

மதுரையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதற்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சு வெங்கடேசனிடம் கேளுங்கள் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை: மதுரையில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகத்தால் கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மதுரை, முல்லை நகர் பீ.பீ.குளம் கண்மாய் 100 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் தேங்கியுள்ளது.

இருப்பினும், தண்ணீரை 90 சதவீதம் வெளியேற்றி விட்டோம். கண்மாயில் தண்ணீர் ஊற்று எடுப்பதால், தண்ணீர் முல்லை நகரில் தேங்குகிறது. ஆனால், மழைநீர் தேங்கவில்லை. எங்கே பாதித்துள்ளது? எதற்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அவரிடமே கேளுங்கள். மழை பாதிப்பால் நோய்த்தொற்று பாதிப்பு வராத வகையில், 60 மருத்துவ முகாம்கள் இருந்த நிலையில், தற்போது 107 மருத்துவ முகாம்களாக உயர்த்தப்பட்டு உள்ளது” என்றார்.

இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி வெளிப்படையாக மதுரை எம்பி சு.வெங்கடேசனின் வலியுறுத்தலுக்கு எதிராக பேசி உள்ளார். ஏற்கனவே திமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே மோதல்போக்கு நிலவி வருவதாக தகவல்கள் கசிந்தன. தற்போது, மதுரை மழை விவகாரத்தில், அது பூகம்பமாக வெடித்து இருக்கிறது. ஏனென்றால், மதுரை மழைப் பொழியும் நேரத்திலே எம்பி, நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: நான் முதல்வர், விஜய் துணை முதல்வரா? இபிஎஸ் தடாலடி பதில்

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பேரில் போஸ்டர் ஒன்றும் எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக மதுரையில் ஒட்டப்பட்டு இருந்தது. அதற்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த அவர், “ரேஷன் கடையில் தரமான பொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால், ஒருவருக்கு கோபம் வருகிறது. அது யாராக இருக்கும்? தரம் இல்லாத, எடை குறைவான பொருளை வழங்க காரணமானவராக இருக்கக்கூடும். அதற்கு எங்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து ‘எம்பியை கண்டா வரச் சொல்லுங்க’ என போஸ்டர் ஒட்டினர்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.