டாப் நியூஸ்

கைகோர்த்த ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு.. தென் மாநிலங்களில் இப்படி ஒரு நிலையா?

நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வு, இன்று (அக்.21) சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க எனக் கூறுவார்கள். அந்த 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள் ஆகும். அவை என்னவென்று கேட்டால், மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், புகழ் ஆகியவதான் பதினாறு செல்வங்கள் ஆகும்.

இவ்வாறான பதினாறு செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என அப்போது வாழ்த்தினார்கள். ஆனால் தற்போது இவ்வாறு வாழ்த்துவதில்லை, தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றே கூறுகிறோம். ஆனால், இன்று நாடாளுமன்த் தொகுதிகளின் எண்ணிக்கை குறைகின்ற போது, ஏன் நாம் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும், நாமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாமே என்ற நிலை தோன்றுகிறது” எனப் பேசினார்.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் ஒருசேர ஒரே கருத்தை கூறுவது பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இதனை ஆராய்ந்து பார்த்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

51 seconds ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

23 minutes ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

39 minutes ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

60 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

1 hour ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

2 hours ago

This website uses cookies.