டாப் நியூஸ்

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் கொடுங்க… திமுக அரசுக்கு DEMAND வைத்த செல்லூர் ராஜூ!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தனியார் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி மற்றும் கனி ஆகிய மூன்று பேர் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து நடைபெற்ற இடத்தையும் , மூன்று பேர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையையும் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, கள்ளச்சாராயத்துக்கு இறந்தவர்களுக்கு இந்த அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தது, அதேபோல் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்த அரசு இழப்பீடு தொகையை தர வேண்டும்.

மேலும் படிக்க: மனைவியுடன் ஒரே கட்டிலில் இருந்த நண்பன்.. துவண்டு போன கணவன் : உயிரை பறித்த உல்லாசம்… கடைசியில் ட்விஸ்ட்!

அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலாக அமையும், அதே போல் கடந்த வருடம் இதுபோல் உள்ள கட்டிடத்திற்கு மதுரை மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது இந்த அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.

இனியும் மதுரை மாநகராட்சி மந்த நிலையில் இல்லாமல் உடனடியாக இது போல் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

4 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.