மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தனியார் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி மற்றும் கனி ஆகிய மூன்று பேர் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து நடைபெற்ற இடத்தையும் , மூன்று பேர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையையும் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, கள்ளச்சாராயத்துக்கு இறந்தவர்களுக்கு இந்த அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தது, அதேபோல் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்த அரசு இழப்பீடு தொகையை தர வேண்டும்.
மேலும் படிக்க: மனைவியுடன் ஒரே கட்டிலில் இருந்த நண்பன்.. துவண்டு போன கணவன் : உயிரை பறித்த உல்லாசம்… கடைசியில் ட்விஸ்ட்!
அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலாக அமையும், அதே போல் கடந்த வருடம் இதுபோல் உள்ள கட்டிடத்திற்கு மதுரை மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது இந்த அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
இனியும் மதுரை மாநகராட்சி மந்த நிலையில் இல்லாமல் உடனடியாக இது போல் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.