டாப் நியூஸ்

பாலம் அமைச்சு கொடுங்க.. ஆபத்தான பயணத்தில் திருவள்ளூர் கிராமத்தினர்..

திருவள்ளூரில் பெய்த கனமழையால் வண்ணிப்பாக்கம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் தற்காலிக கம்பி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வட மாவட்டங்களில் அது கனமழை பெய்தது. முக்கியமாக, சென்னை உள்ளிட்ட KTCC மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

ஆனால், நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் சென்றதால், சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சில இடங்களில் மழைத் தூறல் விழுந்து வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் ஏரி நிரம்பியது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் வண்ணிப்பாக்கம் செல்லும் சாலையானது மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது.

எனவே, இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாதை துண்டிக்கப்பட்டாதால், அவ்வழியாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு கனமழையிலும் அப்பகுதியில் ஏரி நீர் புகுவதால் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், தற்போது மழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் ஊரைக் கடந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடாக, இரும்புக் கம்பிகளைக் கொண்டு ஊராட்சி சார்பில், வினோத முறையில் தற்காலிக தடுப்பு அமைத்து இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடந்து செல்ல அமைத்துள்ளனர். இதில் அவர்கள் ஆபத்தான நிலையில் கடந்து சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க : சும்மா ஜாலிக்கு பண்ணோம்.. ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பள்ளி மாணவர்களிடம் விசாரணை!

இதனால் விரைந்து அப்பகுதியில் தரைப்பால சாலையை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வெள்ள நீரானது நெற்பயிர்கள் இடையே சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

19 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

1 hour ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

2 hours ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.