டாப் நியூஸ்

தலைவலியாகும் தவெக மாநாடு.. என்னதான் செய்கிறார் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம்: கடந்த பிப்ரவரியில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜய் அறிமுகப்படுத்தினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தையும், தவெகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை கட்சி மாநாட்டில் கூறுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

இதன் பேரில், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி, அதாவது இன்னும் மூன்றே நாட்களில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் வந்து பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த வடகிழக்குப் பருவமழையால் மாநாட்டுத் திடம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால், மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. அதேநேரம், மழையின் இடையிலும் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது, மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல் திடல் மாறி வருகிறது. அந்த வகையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால், மாநாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மாநாட்டுத் திடலின் அனைத்து திசைகளிலும் நின்று கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், 2 நாட்களுக்கு முன்பு, பொது சாலையில் பேர்கார்ட் அமைத்து ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. அதேநேரம், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : பிரியாணி அரிசி பையில் கட்டுகட்டாக பணம்.. போலீசில் பரபரப்பு புகார்

அதற்கு முன்னதாக, திடல் அமைந்திருக்கும் பகுதிகளில் இருக்கும் தங்கள் வயல்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, தடுப்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளை அகற்றினர். இவ்வாறு அடுத்தடுத்த இடையூறுகள் விஜயின் தவெகவின் மாநாட்டை சூழ்ந்துள்ளது. இதனிடையே, காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் இடையே விஜய் இருப்பது போன்ற பேனர் வைக்கப்பட்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.