ஆட்சி, அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டும் என திமுக அரசிடம் வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 286 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்பதை நினைக்கிறோம்.
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்போது மற்ற விசயங்களை பேசுவோம். அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆட்சிக்கு வர வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்க இருக்கிறோம் மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது.
அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே விரும்புகிறார்கள் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். மது உட்பட அனைத்து விதமான போதைப் பொருட்களும் இல்லாத சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம் என்றார்.
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
This website uses cookies.