சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கடந்த 2 ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத்தேர்வு இந்த முறை நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. ஜுன் 23ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜுலை 17ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறும்.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் மே 4ம் தேதி வரை செய்முறை தேர்வும், மே 5ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை எழுத்துத் தேர்வும் நடைபெற இருக்கிறது.
மாணவர்கள் அச்சப்படாமல் தேர்வை எழுத வேண்டும். எந்தத்துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப துறைகளை தேர்வு செய்து பயில வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்காக படிக்கக் கூடாது.
மாணவர்கள் எழுதும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்குவது எங்களின் கடமை. அதனை கண்டிப்பாக நாங்கள் செய்வோம். உங்களுடைய திறமையை நமது பள்ளிகளில் காண்பிக்க வேண்டும். உங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் 100 சதவீத செயல்பாட்டை தொடர்ந்து வழங்க வேண்டும், எனக் கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.