சென்னை : 14 மாத கால ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது திமுக என்று அதிமுக இடைக்கால பொதுசெயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில், திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- அதிமுகவை சிதைத்துவிடலாம் என திமுக நினைக்கிறது. அதற்காக பணிகளை செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. பல சோதனைகளை வென்றது அதிமுக. ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்கின்றனர்.
இது விஞ்ஞான உலகம். இலங்கையில் ஏற்பட்ட சூழல் தமிழகத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக பார்த்துகொள்ளுங்கள். அதிமுக பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து, செயல்படுத்துங்கள். திமுக வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
இதே நிலை தொடருமானால் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வரும். அடுத்தது மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ஊழல், கொள்ளை நடந்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும், என்று பேசினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.