டிரெண்டிங்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்? தேர்தல் கணக்கு போடும் திமுக : இன்னும் பலர் மாற வாய்ப்பு!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை திமுக அரசு அதிரடியாக மாற்றி உள்ளது. இது தேர்தலை குறி வைத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும், இன்னும் பலர் மாற்றப்பட உள்ளதாகவும் முத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.

திமுக பொறுப்பேற்று மூன்றறை ஆண்டுகள் முடியும் நிலையில் உள்ளது. ஆனால் திமுக அரசு எதுவும் சொல்லும் படியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் மேலோங்கி உள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 99% நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் மார்தட்டி பேசுகிறார்.

ஆனால் எதுவும் நிறைவேற்றவில்லை மின்கட்டண கணக்கெடுப்பு ஒரு மாதத்துக்கு ஒரு முறை நடக்கும் என்றார்கள் நடந்ததா. மின் கட்டணத்தை குறைப்போம் என்றார்கள் குறைந்ததா.

சொத்து வரியை உயர்த்தினார்கள் என எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைக்கின்றார்கள். இதே போல பல கோரிக்கைகள் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்தது.

ஆனால் நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு இன்று பொதுமக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் மேலோங்கி இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வரவுள்ளது.

ஆனால் ஓராண்டு தான் முழுமையாக உள்ளது. இந்த ஆண்டு முடிந்து மே மாதம் வந்த உடனே தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் துவங்கிவிடும் என அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை இழுத்து பலருக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளும் தயார் நிலையில் உள்ளன. 50000 பணியிடங்களுக்கு உடனடியாக வேலை ஆணைகளை அரசு வழங்க உள்ளது.

இதன் மூலம் 40 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு திமுக திட்டம் தீட்டு உள்ளது. ஏற்கனவே கல்லூரி மாணவிகளுக்கு வழங்குவது போல ஆயிரம் ரூபாய் கல்லூரியில் மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய உத்வேகத்துடன் செயல்பட அமைச்சரவை மாற்றம் துணை முதல்வர் அறிவிப்பு என அடுக்கடுக்கான நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கி உள்ளது. இதில் மற்றொரு பகுதியாக தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
*வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சமூக நல ஆணையராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடைய செயல்பாடுகள், கடந்த ஆண்டுகள் அவர்களுடைய பிராகரஸ் ரிப்போர்ட் ஆகியவை அரசு கணக்கிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை நீக்குவதற்கு அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: திமுக அரசு தேர்தல் பணியை தற்போதைய துவக்கி உள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பணி தொடர்ந்து நடக்கும் என தெரிகிறது. இன்னும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படலாம். கட்சி நிர்வாகிகளையும் திமுக அரசு உஷார் படுத்தி வருகிறது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அரசின் திட்டங்களின் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். என்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

24 minutes ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

1 hour ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

2 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

4 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

4 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

4 hours ago

This website uses cookies.