மதுரை : மேலூர் அருகே தொடர் பள்ளி சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி கூட்டுப்பாலியலில் இளைஞர்கள் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் மற்றும் சபரி தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இவர்களது பெண் குழந்தை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்.
இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த சுல்தான் என்பவருடைய 26 வயது மகனான நாகூர் அனிபாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், சிறுமியை நாகூர் அனிபா கடத்தி சென்று தொடர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் சபரி அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் அனீபாவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நாகூர் ஹனிபா என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து போதை மருந்து கொடுத்து தொடர் பாலியல் இச்சைக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி சிறுமிகள், பெண்கள் மீது தொடர் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.