மதுரை : மேலூர் அருகே தொடர் பள்ளி சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி கூட்டுப்பாலியலில் இளைஞர்கள் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் மற்றும் சபரி தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இவர்களது பெண் குழந்தை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்.
இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த சுல்தான் என்பவருடைய 26 வயது மகனான நாகூர் அனிபாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், சிறுமியை நாகூர் அனிபா கடத்தி சென்று தொடர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் சபரி அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் அனீபாவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நாகூர் ஹனிபா என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து போதை மருந்து கொடுத்து தொடர் பாலியல் இச்சைக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி சிறுமிகள், பெண்கள் மீது தொடர் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.