கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: மாணவர்களின் தொடர் போராட்டத்தால் 2 பேராசிரியர்கள் கைது..!!

தென்காசி: பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பேராசிரியர்களை கைது செய்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனோ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்காசி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முதலாண்டு படித்து வருகிறார். பிரியாவிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் அவர் தனது தோழியின் செல்போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட கல்லூரி பேராசிரியை மற்றும் பேராசிரிசிரியர் இருவரும் மாணவி பிரியாவை கண்டித்ததுடன் இதுகுறித்து மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு கூறி உள்ளனர். மாணவி எவ்வளவோ மறுத்தும் பேராசிரியர்கள் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

அவரை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்குமாறு தொடர்ந்து பேராசிரியர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர் . மாலை வீட்டிற்கு வந்த மாணவி பிரியா மறுநாள் கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு கல்லூரி ஆசிரியரும் ஆசிரியையுமே காரணம் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வந்தனர்.

இந்நிலையில் தென்காசி அருகில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சபேராசிரியர் வளர்மதி, முத்துமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராசிரியர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்திவந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.