+2 மாணவன் இறப்பில் திடீர் திருப்பம்… போதை ஊசி போட்டதால் மரணம்? சுடுகாட்டில் உடலை தோண்டி எடுத்த போலீசார்!!!

சேலம் தாதகாப்பட்டி வேலூர் புது தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவரது மனைவி செல்வி இவரது மகன் கிரி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவன் உடலை மணினுர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் போதை ஊசி போட்டுக் கொண்டதால் மாணவன் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

அதன் பெயரில் உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவனின் பெற்றோர் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை மாணிக்கம் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை தோண்டி எடுத்து பெய்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சுடுகாட்டுக்குச் சென்று இன்று உடலை தோண்டி மாணவன் உடலை எடுத்து பெய்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறும் போது மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா இல்லை முன்விரோத காரணமா என எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் எனவும் மாணவனுக்கு மாநகருக்கு போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருப்பதாகவும் தகவல் உள்ளது.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் எனவும் தெரிவித்தார் மேலும் மாணவன் கிரி மீது கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக உதவி ஆணையாளர் அசோகன் தெரிவித்தார்

சேலம் மாநகரில் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது குறிப்பாக சில நாயக்கன்பட்டி பகுதி முழுவதும் போதை மாத்திரை ஊசி உள்ளிட்டவைகள் மருந்து கடைகளில் அதிக அளவில் விற்கப்படுகிறது இது குறித்து காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

7 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

9 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

13 hours ago

This website uses cookies.