உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த செல்லத்துரை அண்மையில், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே மாதம் 23-ம் தேதி உயிரிழந்தார்.
அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், அறநிலையத்துறையின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், செல்லத்துரை பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தட்டிக்கேட்கும் பெண்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனக்கூறி செல்லத்துரை மிரட்டுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் மேலும் சில பெண்கள் வெளியில் வந்து புகாரளிப்பார்கள் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை ஆணையரிடமும், இந்து அறநிலையத்துறை விசாரணை கமிட்டியிடமும் புகார் செய்திருக்கும் பெண்கள், புகாரின் நகலை இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.