ஒண்ணா…ரெண்டா…200 போலி சான்றிதழ்கள்…தமிழக அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம்: அப்போ தமிழர்களுக்கு இடமில்லையா?…அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில்சேர வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் மாநிலத்தில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்கள், ரெயில்வே மற்றும் என்.எல்.சி. போன்ற நிறுவனங்களில் பணியில் சேர முடியவில்லை என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

இதுதவிர தமிழ் நாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களும் பிற மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதுபற்றிய விசாரணைகளில் டெல்லி, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், அறியானா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் அதிகளவில் இடம்பிடித்து உள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்காக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

தற்போது தமிழத மத்திய அரசு நிறுவனங்களில் 20-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத்துறை வழங்கியது போன்றே காட்சியளிக்கும் போலி ஆவணம் கொடுத்து வடமாநிலத்தவர்கள் மத்திய அரசு பணிகளின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதே போன்று மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் சுமார் 200க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சல் துறை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இவ்வாறு நடைபெற்று இருக்கிறது. யு.பி.எஸ்.சி. மேற்கொண்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து இருக்கிறது.

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க அரசின் தேர்வுகள் துறை அஞ்சல் துறைக்கு பரிந்துரை செய்து இருக்கிறது. இது மட்டும் இன்றி போலி சான்றிதழ் கொடுத்த நபர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், அரசின் தேர்வுகள் துறை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து இருக்கிறது.

தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிற மாநிலத்தவர்கள் தமிழ மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருக்கும் சம்பவம் அம்பலமாகி இருப்பதை அடுத்து அரசு வேலையில் சேர முயற்சி செய்வோர் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

6 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.