திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்து காவலர்களுக்கு மின்மிதி வண்டிகளை வழங்கி நிகழ்வை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மேலும் சீரமைத்து விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்களும் சிறைவாசிகளுக்கு இசைக்கருவிகளை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.
பின்னர் கைப்பந்து விளையாட்டு போட்டியை விளையாடி துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் சிறை நூலகத்தை சிறை துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீண்ட ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க சிறையில் மனுக்கள் அளித்துள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே முதல் முறை நிராகரித்து விட்டார் இரண்டாவது முறையாக ஆளுநர் வசம் தற்போது கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
பின்னர் ஐடி ரெய்டு பற்றி பேசிய அவர் வருமான வரித்துறையினர் 2019 ஆம் ஆண்டு சோதனை நடத்தினார்கள். தற்போதும் நடத்துகின்றனர். சோதனை முடியட்டும் பார்க்கலாம். குற்றசாட்டுகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பதில் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.