சித்தா பட பாணியில் சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் வடைமாலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமையை கொலை செய்து உடலை புதைத்துவிட்டான்.
இதை அறியாத சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாக்லேட் கொடுத்து அந்த சிறுமியை சுசாந்த் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்த நிலையில் அது பற்றி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சுசாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்து தீவிர விசாரணை நடத்திய போது அவன் சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்திச் சென்று வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டான்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்து சேர்ந்த புத்தூர் போலீசார் சுசாந்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
This website uses cookies.