தமிழகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை… விவசாயிகளின் அழுகைக்கு CM ஸ்டாலின் பதில் சொல்லியே ஆகனும் ; அறப்போர் இயக்கம்..!!

விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இது வரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை என்று விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து அறப்போர் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட கிராமங்களில், சிப்காட் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் சுமார் 3,600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அரசின் இந்தப் பணிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கோட்டாட்சியரை சந்தித்து முறையிட, பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த போலீசார், கடந்த 4ம் தேதி நள்ளிரவில் சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து வேலூர், புழல், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர்.

இதனிடையே, போராட்டக் குழு பிரதிநிதிகளான பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இதுவரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை அரசுக்கு தர மறுத்து போராடிய விவசாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியாத திமுக அரசு அவர்களை இரவு தூங்கும் போது வீடு புகுந்து கைது செய்து தனித்தனி சிறைகளில் அடைத்து தற்பொழுது குண்டர் சட்டத்தையும் அவர்கள் மீது போட்டுள்ளது.

விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இது வரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை. இந்த விவசாய மக்களின் அழுகைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

54 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

4 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

6 hours ago

This website uses cookies.