விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
பேருந்து நிலையம் முதல் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் நிரம்பி காணப்பட்டது விழுப்புரத்தை அடுத்துள்ள கக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் இவருடைய மகள் சன்மதி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பெய்த கன மழை காரணமாக இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது இதன் விளைவாக இவர்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதன பொருட்களும் அதிக மின்னோட்டம் காரணமாக வெடித்துச் சிதறியது.இதனால் ஏற்பட்ட அதிக வெளிச்சம் காரணமாக சிறுமியின் கண்பார்வை பறிபோனதாக சொல்லப்படுகிறது
மின்னல் தாக்கிய சிறிது நேரத்தில் சிறுமியின் கண் பார்வை மங்கலாகவே அவர் கதறி அழுதுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் பார்வை முழுவதும் பறிபோனது.உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு கண் பார்வையை திரும்ப கொண்டு வர முடியுமா என மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் கண் பார்வை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.