ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் 2ம் தாள் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4,01,986 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்திருப்பது கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.