கோவை ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த மனைவியை காணவில்லை என்று ஆலந்துறை காவல் நிலையத்தில் கணவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பழனிகுமார் (40). தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபஸ்ரீ (34). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியினருக்கு 11 வயதில் மகள் உள்ளார். சுபஸ்ரீ கடந்த நான்கு வருடத்திற்கு முன்பாக ஈஷா யோகா மையத்துக்கு வந்து யோகா பயிற்சி பெற்றுள்ளார்.
மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் காலை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். பின்னர் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். பின்னர், அவரை அழைத்துச் செல்ல அவருடைய கணவர் பழனிகுமார் ஈஷா யோகம் வந்துள்ளார். பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால், அதிர்ச்சியடைந்த கணவர் வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்து கூறியுள்ளார்.
உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் நேற்று காலை 9.30 மணிக்கு கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி டிரைவரை விசாரணை செய்த போது, அவர் சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளே சென்ற பெண் பை மற்றும் கைபேசி ஆகியவையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் வெளியில் வரும் பொழுது பெண்ணின் கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை கலர் உடை அணிந்து தெருவில் ஓடக்கூடிய காட்சிகள் தெளிவாக சிசிடிவியின் வாயிலாக பதிவாகியுள்ளது.
பெண்ணிற்கு உள்ளே என்ன நடந்தது..? எதற்காக ஓடினார் மற்றும் இரண்டு நாட்களாக பெண் வீடு திரும்பாததன் காரணம் என்ன..? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.