சென்னை வடபழனியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இடைவேளையி்ன் போது டின்னில் அடைக்கப்பட்ட கோல்ட் காஃபி ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். அதனுள் கருப்பாக ஏதோ ஒன்று தட்டுப்படவே அது என்ன என்று ஒரு கப்பில் ஊற்றி சோதனை செய்துள்ளார். அதற்குள் ஒரு ஈ இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து புகார் அளிக்க உணவுப் பாதுகாப்பு துறைக்கு அழைத்ததாகவும் அவர்கள் போனை எடுக்காததால் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் யாரேனும் வாங்கி அருந்தியிருந்தால் அப்படியே பூச்சியுடன் விழுங்கி இருக்கவும் வாய்ப்புண்டு என்று கூறிய அவர் குழந்தைகள் கர்ப்பிணிகள் இனியும் இதை வாங்கி அருந்தக்கூடும் என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.